/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோட்டக் மஹிந்திரா வங்கி திறப்பு விழா
/
கோட்டக் மஹிந்திரா வங்கி திறப்பு விழா
ADDED : மே 24, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் கோட்டக் மஹிந்திரா வங்கியை, சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் திறந்து வைத்தார்.
கடலுார் சுப்புராய தெருவில், கோட்டக் மஹிந்திரா வங்கி திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு, வங்கியின் மண்டல வணிக தலைமை அதிகாரி கார்த்திக் தலைமை தாங்கினார். மண்டல கடன் மேலாளர் தர்மேந்திரகினி முன்னிலை வகித்தார். கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, வங்கியை திறந்து வைத்தார்.
மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது, பகுதி மேலாளர் வெங்கடேஸ்வரன், கிளை மேலாளர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.