
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : கீரப்பாளையம் அடுத்த வயலுார் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன் தினம் 25ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. மாலை 5:00 முதல் இரவு 8:00 மணிக்குள் முதல் யாக சாலை பூஜை மற்றும் ஆராதனை நடந்தது.
நேற்று 26ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு இரண்டாம் யாகசாலை பூஜையும், 6:00 மணிக்கு மேல் பூர்ணாகுதி தீபாரா தனையும் நடந்தது.தொடர்ந்து கடம் புறம்பாடாகி காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் விமானத்தில் கோபுர கலசத்தில், நீர் ஊற்றி, கும்பாபி ஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

