ADDED : ஆக 13, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி அருகே லாரி மோதி ரைஸ்மில் தொழிலாளி உயிரிழந்தார்.
பீகார் மாநிலம், மேற்கு சம்பாரண் மாவட்டம், பெத்தியா பகுதியை சேர்ந்தவர் நவல்குமார் மகன் ராஜூகுமார்,27; இவர், ராமநத்தம் அடுத்த வெங்கனுாரில் உள்ள பழனிமுருகன் ரைஸ் மில்லில் சுமைதுாக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு உமி ஏற்றி வந்த லாரி, ரிவர்ஸ் எடுக்கும் போது அங்கு நின்றிருந்த ராஜூகுமார், லாரி மோதியதில் தலைநசுங்கி இறந்தார்.
ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

