ADDED : மே 24, 2024 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது.
கோவிலில், முன்னதாக 108 கலசங்களில் புனிதநீர் நிரப்பி யாகம் செய்து கைலாசநாதருக்கு கலசாபிஷேகம் நடந்தது. மேலும் கணபதி, காயத்ரி, நவகிரக ஹோமங்கள் நடந்தது. மாலை அகிலாண்டேஸ்வரி சமேதராய் கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
இரவு பஞ்சமூர்த்திகளுடன் கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் பிரகாரத்தை வலம் வந்து அருள்பாலித்தார்.