ADDED : ஜூலை 11, 2024 05:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், வழக்கறிஞர்கள்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர் அறிவுடைநம்பி தலைமை தாங்கினார். இதில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். வழக்கறிஞர்களின் பாதுகாப்பு குறித்து வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.