sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மே தின விடுமுறையில் மது விற்பனை 'ஜோர்'

/

மே தின விடுமுறையில் மது விற்பனை 'ஜோர்'

மே தின விடுமுறையில் மது விற்பனை 'ஜோர்'

மே தின விடுமுறையில் மது விற்பனை 'ஜோர்'


ADDED : மே 01, 2024 11:42 PM

Google News

ADDED : மே 01, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : விருத்தாசலத்தில் மே தின விடுமுறையிலும் போலீஸ் ஆசியுடன் மது விற்பனை அமோகமாக நடந்தது.

மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி, மாநிலம் முழுவதும் அரசு விடுமுறை என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையறிந்த மதுப்பிரியர்கள் சிலர், நேற்று முன்தினமே தேவையான மதுபானங்களை வாங்கி, இருப்பு வைத்தனர்.

நேற்று அரசு விடுமுறை என்பதால், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில், விருத்தாசலம் உட்பட மாவட்டம் முழுவதிலும் நேற்று காலை முதலே டாஸ்மாக் கடைகளுக்கு அருகே மது விற்பனை அமோகமாக நடந்தது.

மொபட் வகை வாகனங்களின் பெட்டிகளில் மதுபானங்களை வைத்து, கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகமாக நடந்தது. வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் மது வகைகள், 50 முதல் 200 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்பனையானது.

இதனை தடுக்க வேண்டிய போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. டாஸ்மாக் விடுமுறை நாளிலும் அமோகமாக மது விற்பனையானது பொது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us