ADDED : ஜூன் 03, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : விருத்தாசலத்தில் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ஜங்ஷன் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், 58, என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ராமலிங்கத்தை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த லாட்டரிகளை பறிமுதல் செய்தனர்.