ADDED : ஆக 27, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தென்கோட்டை வீதி பகுதியில், லாட்டரி சீட்டு விற்ற ஆலிச்சிக்குடி, தோப்பு தெருவைச் சேர்ந்த சேகர், 64, என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
இவர், கடந்த 10 நாட்களுக்கு முன் லாட்டரி விற்பனையில் கருவேப்பிங்குறிச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.