/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்சோவில் கைதானவர் குண்டர் சட்டத்தில் கைது
/
போக்சோவில் கைதானவர் குண்டர் சட்டத்தில் கைது
UPDATED : மார் 13, 2025 05:14 PM
ADDED : மார் 13, 2025 12:45 AM

கடலூர்: விருத்தாசலத்தில் போக்சோ வழக்கில் கைதானவரை, போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
விருத்தாசலம் அடுத்த டி.மாவிடந்தல், சிறுவம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாசு,39. இவர் 17வயது
சிறுமியிடம்
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதற்காக விருத்தாசலம் மகளிர் போலீசார்,
போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரது குற்ற நடவடிக்கையை
தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு,
எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் சிபி
ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில், சந்திரகாசு குண்டர் சட்டத்தில்
கைது செய்யப்பட்டதற்கான ஆணையை கடலுார் மத்திய சிறையில் போலீசார்
வழங்கினர்.