ADDED : ஆக 02, 2024 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி, - புவனகிரி ஒன்றியம் வடதலைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழுக்கூட்டம் நடந்தது.
வடதலைக்குளம் பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்தில் தலைமை ஆசிரியர் துரைமணிராஜன் தலைமை தாங்கினார். பெற்றோர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர்கள், முன்னாள் மாணவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு மூலம் வழங்கப்படும் திட்டங்களை எடுத்துக்கூறி பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்த்து அரசு திட்டங்களை பெற்று பயன்பெறுமாறு வலியுறுத்தினர். உதவி ஆசிரியர் வசந்தா நன்றி கூறினார்.