ADDED : மார் 07, 2025 11:15 PM
அ நிறம் | அளவு
கடலுார்: வடலுார் அருகே பால் வியாபாரியை காணவில்லை என, அவரது மனைவி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வடலுார் ஆபிசர் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், 60. கடந்த இரண்டு ஆண்டுகளாக பால் வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த ஜனவரி 19ம் தேதி காலை, தனது மொபட்டில் பால் வியாபாரத்திற்கு சென்ற சுப்பிர மணியன் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரில், வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
