
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது.
காலை 9:00 மணிக்கு வேழவிநாயகர் கோவிலிலிருந்து 306 பால்குடங்களை பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர், ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு பாலாபிேஷகம் நடந்தது. பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அகிலபாரத ஐயப்பசேவா சங்கத்தினர் அன்னதானம் வழங்கினர்.

