/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய கட்டடங்கள் அமைச்சர் திறந்து வைப்பு
/
புதிய கட்டடங்கள் அமைச்சர் திறந்து வைப்பு
ADDED : செப் 14, 2024 07:19 AM

வடலுார்: குறிஞ்சிப்பாடி தொகுதியில் பல்வேறு அலுவலக கட்டடங்களை அமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சரண்யா முன்னிலை வகித்தார்.
அமைச்சர் பன்னீர்செல்வம் அரங்கமங்கலம், கொத்தவாச்சேரி ஆகிய ஊராட்சிகளில் ரூ. 39 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி கட்டடத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அரங்கமங்கலம், ராசாகுப்பம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார்.
குறிஞ்சிப்பாடியில் 25 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட பரவனாறு வடிநில உபகோட்டம் மற்றும் பிரிவு அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.
குண்டியமல்லுார் ஊராட்சியில் துணை சுகாதார நிலையத்தையும் திறந்து வைத்தார். மாவட்ட கல்வி குழு தலைவர் சிவக்குமார், சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் தணிகாசலம், உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர்கள் கொளஞ்சிநாதன், செந்தில்குமார், சக்திசெல்வன், ராமன், தாசில்தார் அசோகன், பி.டி.ஓ.,க்கள் வெங்கடேசன், ராமச்சந்திரன், ஊராட்சி தலைவர்கள் அருள்ஜோதி, கண்ணகி பாலகிருஷ்ணன், சங்கர், வடலுார் சேர்மன் சிவக்குமார், நகர் செயலாளர் தமிழ்ச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.