நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மொபட் தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார், துறைமுகம் அக்கரைகோரியைச் சேர்ந்தவர் ஆனந்தமுருகன், 58. இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் வளாகத்தில் மொபட்டை நிறுத்தி வைத்தார்.
அப்போது, மொபட் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு திடுக்கிட்ட எழுந்த அவர், தீயை அணைத்தார்.
இருப்பினும் தீ விபத்தில் மொபட் முழுதும் எரிந்து சேதமானது.
இதுகுறித்து கடலுார் துறைமுகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

