/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடம் அருகே மர்மமாக எரிந்த பைக்
/
பெண்ணாடம் அருகே மர்மமாக எரிந்த பைக்
ADDED : மே 10, 2024 01:24 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே மர்மமான முறையில் நிறுத்தியிருந்த பைக் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த காரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி, 43; விவசாயி. இவர் நேற்று காலை 10:45 மணியளவில் தனது பைக்கில் (டி.என். 31 - எக்ஸ். 3006) அதே பகுதியில் உள்ள தனது பைக்கை நிறுத்தி விட்டு வெங்கடாஜலபதி வயலுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது தனது பைக் தீப்பிடித்து எரிந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கிராம மக்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் பைக் எரிந்து சேதமானது.
தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர்.
இதுகுறித்து புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, பைக் எப்படி தீப்பிடித்து எரிந்தது என விசாரிக்கின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.