sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நந்தப்பாடி ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் தேவை

/

நந்தப்பாடி ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் தேவை

நந்தப்பாடி ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் தேவை

நந்தப்பாடி ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் தேவை


ADDED : ஆக 02, 2024 10:38 PM

Google News

ADDED : ஆக 02, 2024 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்,- நந்தப்பாடி பகுதி ரேஷன் கடைக்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்ணாடம் அடுத்த நந்தப்பாடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வெண்கரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பகுதி நேர ரேஷன் கடை ஊராட்சிக்கு சொந்தமான பழமையான கட்டடத்தில் துவங்கப்பட்டது.

இதன் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை உட்பட ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ரேஷன் கடையில் இட பற்றாக்குறை மற்றும் மழை நேரங்களில் மழைநீர் கசிவதால் சர்க்கரை, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வைக்க முடியாத நிலை உள்ளது.இதனால், வெண்கரும்பூர் கூட்டுறவு சங்க அலுவலகதத்தில் ரேஷன் பொருட்களை இருப்பு வைத்து, அவ்வப்போது எடுத்து வந்து மக்களுக்கு வழங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, நந்தப்பாடி பகுதி நேர ரேஷன் கடைக்கு சொந்தக் கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us