sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடிமகன்களின் கூடாரமான நுாலகம்

/

குடிமகன்களின் கூடாரமான நுாலகம்

குடிமகன்களின் கூடாரமான நுாலகம்

குடிமகன்களின் கூடாரமான நுாலகம்


ADDED : ஆக 21, 2024 07:42 AM

Google News

ADDED : ஆக 21, 2024 07:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த தீவளூர் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், நூலகக் கட்டடம் கட்டப்பட்டது.

நூலகத்திற்கு ஒன்றிய அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் மாத, வார இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் வரும்.இது தவிர, பொது அறிவு புத்தகங்கள், மாணவ, மாணவியருக்கு பயன்படும் இந்தியா மற்றும் உலக நாடுகளில் நடந்த வரலாற்றுக் கதைகள் அடங்கிய புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன.

கிராமங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை தங்கள் அறிவுப்பசியை போக்கவும், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும் வந்து செல்வர்.

ஆனால், ஓரிரு மாதங்கள் மட்டுமே செயல்பட்ட நூலகம் நாளடைவில் தளவாட பொருட்கள், புத்தகங்கள் இன்றி காட்சிப்பொருளானது. இதனால் நுாலகம் பகல், இரவு நேரங்களில் மது அருந்தும் கூடாரமாகவும், கால்நடைகளின் தொழுவமாகவும் மாறியுள்ளது.எனவே, தீவளூரில் குடிமகன்களின் கூடாரமாக உள்ள கிராமப்புற நுாலகத்தை தினசரி திறக்க வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us