sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு விருத்தாசலத்தில் பயணிகள் அவதி

/

பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு விருத்தாசலத்தில் பயணிகள் அவதி

பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு விருத்தாசலத்தில் பயணிகள் அவதி

பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு விருத்தாசலத்தில் பயணிகள் அவதி


ADDED : ஏப் 30, 2024 05:44 AM

Google News

ADDED : ஏப் 30, 2024 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகளை விரிவாக்கம் செய்ததால், பயணிகள் நிற்க இடமின்றி தவித்து வருகின்றனர்.

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, சேலம், திண்டுக்கல் போன்ற பெரு நகரங்களுக்கும், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகாக போன்ற பிற மாநிலங்களுக்கும் பஸ் வசதி உள்ளது.

தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

நகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் இயங்குகின்றன. இந்த கடைகளின் உரிமையாளர்கள், பயணிகள் நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்களை அடுக்கி வைத்துள்ளனர்.

இதனால் பயணிகள் நிற்க இடமின்றி, நடந்து செல்ல வழியின்றி மிகுந்த சிரமமடைகின்றனர்.

இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் கடந்தாண்டு செய்தி வெளியானபோது, நகராட்சி நிர்வாகம் சார்பில் கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. ஆனால், ஓரிரு நாட்களில் ஆக்கிரமிப்பு மீண்டும் துவங்கியது.

இதனால் பயணிகள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மிகுந்த சிரமமடைகின்றனர்.

எனவே, பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, பயணி கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us