ADDED : மே 23, 2026 02:50 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: சாலை விபத்தில் காயமடைந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
விருத்தாசலம் அடுத்த மோசட்டை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன், 55; நேற்று முன்தினம் மதியம் கருவேப்பிலங்குறிச்சி சாலையில், மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு மொபட்டில் வீட்டிற்கு வந்தார். அப்போது, பின்னால் வந்த பைக் எதிர்பாராத விதமாக மோதியதில் படுகாயமடைந்த நடராஜன், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
அவரது மகன் வெங்கட்ராமன், புகாரின் பேரில், பைக் ஓட்டிவந்த அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த ஓலையூரை சேர்ந்த காமராஜ் மகன் அன்பரசு என்பவர் மீது கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
