ADDED : செப் 05, 2024 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பரிதாபமாக இறந்தார்.
திருச்சியில் இருந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சென்னை நோக்கி சென்றது.
கடலுார் முதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது, 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, ரயில் மோதியதில் அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்த கடலுார் முதுநகர் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து முதுநகர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.