ADDED : ஜூலை 20, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு தலைமையிலான போலீசார் இருளக்குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அதேபகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி ராஜவள்ளி, 60, என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து ராஜவள்ளியை கைது செய்தனர். அவரிடம் இருந்த டாஸ்மாக் மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர்.