ADDED : மார் 04, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் அருகே லாரி மோதியதில் மொபட்டில் சென்றவர் இறந்தார்.
புதுச்சேரி, முத்தரையர் பாளையத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 49, டிரைவர். இவர் நேற்று காலை 11மணியளவில் தனது மொபட்டில் கடலுார் புதுச்சேரி சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வந்த லாரி மோதியதில் தலையில் காயமடைந்த பாஸ்கரன் அதே இடத்தில் இறந்தார்.
புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.