/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புறக்காவல் நிலையம் ஆல்பேட்டையில் திறப்பு
/
புறக்காவல் நிலையம் ஆல்பேட்டையில் திறப்பு
ADDED : மே 02, 2024 12:32 AM

கடலுார் : கடலுார் ஆல்பேட்டை சோதனை சாவடியில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.
ஆனந்தம் துணிக்கடை சார்பில் ரூ. 5 லட்சத்தில் கட்டி கொடுக்கப்பட்ட புறக்காவல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. டி.எஸ்.பி., பிரபு தலைமை தாங்கினார். புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் முன்னிலை வகித்தனர். எஸ்.பி., ராஜாராம் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். பின், புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமிராவை பார்வையிட்டார்.
அப்போது, ஆனந்தம் சில்க்ஸ் பொது மேலாளர் ராஜகுரு, கிளை மேலாளர் பாலாஜி மற்றும் ஊழியர்கள், போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

