/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கண்ணாரப்பேட்டையில் நீர், மோர் பந்தல் திறப்பு
/
கண்ணாரப்பேட்டையில் நீர், மோர் பந்தல் திறப்பு
ADDED : மே 02, 2024 12:24 AM

கடலுார், : கடலுார் அடுத்த கண்ணாரப்பேட்டையில் தே.மு.தி.க., சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.
மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராஜ், துணைச் செயலாளர் சித்தநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வைத்தியநாதன், சுரேஷ், மாநகர செயலாளர் சரவணன் முன்னிலை வைத்தனர்.
மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் குமரேசன், கலாநிதி, சரவணன், வடலுார் நகர செயலாளர் ஜாகிர் உசேன், ஒன்றிய கவுன்சிலர் சசிதேவி சத்தியமூர்த்தி, மாவட்ட இளைஞரணி ராஜசேகரன், விவசாய அணி ராஜவேலு, ஒன்றிய அவைத் தலைவர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வள்ளி ராஜாராம் நன்றி கூறினார்.

