ADDED : மே 05, 2024 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் சுகாதாரத்துறை, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கப்படுகிறது.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெயில் நேரத்தில் வெளியே செல்பவர்களுக்கு உடலில் தண்ணீர் சத்து குறைந்து சோர்வு, மயக்கம், உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இதனால் ஏற்படும் ஆற்றல் இழப்புகளைத் தடுக்க ஓ.ஆர்.எஸ்., கரைசலை கடைவீதி, பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.