/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சி பள்ளியில் முப்பெரும் விழா
/
ஊராட்சி பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : ஆக 29, 2024 11:15 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச கேயேடு, தேசிய திறனறி பயிற்சி, ஆசிரியர்களுக்கு பாராட்டு முப்பெரும் விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் ஜெயந்தி குறளரசன் தலைமை தாங்கினார்.
வட்டார கல்வி அலுவலர் மணிவாசகன், தலைமை ஆசிரியர் நன்மாறன், ஊராட்சி துணைத் தலைவர் புகழேஸ்வரன், முன்னாள் ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம், கல்வியாளர் அன்பழகன், சங்கர் முன்னிலை வகித்தனர். கடலுார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கருணாகரன் வரவேற்றார்.
விழாவில், கடலுார் மாவட்டத்தில் பெற்றோர்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான கையேடுகளை வழங்கினர்.
திறனறி தேர்வில் அதிகளவு தேர்ச்சி பெற்ற வாழைக்கொல்லை நடுநிலைப்பள்ளி மாணவர்களை பாராட்டினர்.
பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் மணிவாசகன் சான்றிதழ் வழங்கினார். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன், ஆசிரியர்கள், நாகராஜன், சுப்ரமணியன், திருஞானசம்பந்தம், தமிழ்செல்வன், பார்த்திபன், தங்கவேல், முத்துக்குமார், விஜயகுமார், செல்வம், செல்வி, சரிதா, கீதா,செந்தில்குமாரி, தனலட்சுமி, கலாவதி, எமில்டா, எழிலரசி, அமுதா மற்றும் ஒருங்கிணைப்பாளர் வைதேகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கணிணி ஆசிரியர் சந்திரலேகா நன்றி கூறினார்.

