sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பண்ருட்டி விஷ சாராய வழக்கு; 23 ஆண்டுக்கு பிறகு ஒருவர் கைது

/

பண்ருட்டி விஷ சாராய வழக்கு; 23 ஆண்டுக்கு பிறகு ஒருவர் கைது

பண்ருட்டி விஷ சாராய வழக்கு; 23 ஆண்டுக்கு பிறகு ஒருவர் கைது

பண்ருட்டி விஷ சாராய வழக்கு; 23 ஆண்டுக்கு பிறகு ஒருவர் கைது


ADDED : நவ 07, 2024 06:20 AM

Google News

ADDED : நவ 07, 2024 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி; பண்ருட்டி அருகே, 23 ஆண்டுக்கு முன்பு விஷ சாராயம் குடித்ததில் 53 பேர் இறந்த வழக்கில் ஒருவரை நேற்று புதுப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த ஒறையூர், மேல்அருங்குணம், நத்தம், மணம்தவிழ்ந்தபுத்துார் ஆகிய கிராமங்களில் கடந்த 2001 நவம்பர் 29ம் தேதி விஷசாராயம் குடித்து 53 பேர் பலியாகினர். பலருக்கு கண் பார்வை பாதித்தது.

புதுப்பேட்டை போலீசார், விஷசாராய விற்பனையில் ஈடுபட்டதாக 22 பேர் மீது வழக்கு பதிந்து 8 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தபட்ட 7 பேர் இறந்துவிட்டனர்.

இவ்வழக்கு கடலுார் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கோர்ட் உத்தரவின்பேரில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் என்கிற தோஜாஆனந்த் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று திருப்பூர் அம்பேத்கர் நகர் ரயில்வே காலனியை சேர்ந்த ஜேம்ஸ்பாண்ட் என்கிற தோஜா ஆனந்த், திருப்பூரில் உள்ள மளிகை கடையில் வேலைபார்ப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் திருப்பூர் சென்று, தோஜா ஆனந்தை,58; கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us