ADDED : ஜூலை 14, 2026 06:23 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: ஆடிப்பட்ட வேர்க்கடலை விதைக்கும் பணியில் விருத்தாசலம் பகுதி விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விருத்தாசலம் அடுத்த மணலுார், மணவாளநல்லுார், எருமனுார், சின்னவடவாடி, பெரியவடவாடி, எ.வடக்குப்பம், கோ.பூவனுார், கோ.பவழங்குடி, எடைச்சித்துார், காட்டுப்பரூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் ஆண்டுதோறும் ஆடிப்பட்டத்தில் போர்வெல், கிணறு மற்றும் மானாவாரியாக வேர்க்கடலை விதைப்பு செய்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. இந்த மழையின் ஈரப்பதத்தை பயன்படுத்தி விருத்தாசலம் பகுதி விவசாயிகள் நடப்பாண்டு வேர்க்கடலை விதைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
