/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பு
/
சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பு
ADDED : மே 07, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று சித்திரை மாத அமாவாசை முன்னிட்டு, மூலவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையொட்டி, காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:00 மணிக்கு உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடை திறப்பு, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

