/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருக்கண்ணாடி அறையில் பெருமாள் அருள்பாலிப்பு
/
திருக்கண்ணாடி அறையில் பெருமாள் அருள்பாலிப்பு
ADDED : ஆக 05, 2024 12:18 AM

பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ஆடிமாத அமாவாசையை முன்னிட்டு காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடாகி திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மூலவர் பெருமாள் பூவங்கி சேவையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.