ADDED : ஆக 14, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : ஆற்றகில் மர்மமான முறையில் இறந்த கிடந்த ஆண் நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் பாலக்கரை மணிமுக்தாற்றில், நேற்று காலை, 50 வயது ஆண் நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்ற உடல மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம் கிராமத்தை சேர்ந்த அருள்,50, என்பதும், தற்போது, தனது குடும்பத்தினருடன் விருத்தாசலம் தங்கமணி கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, அருள் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.