நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதையொட்டி, மாலை 4:30 மணியளவில் நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு 12 வகையான பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. மூலவருக்கு பாலபிேஷகம் செய்யப்பட்டது. அருகம்புல், வில்வ மாலைகள் சாற்றி நந்தி பகவானுக்கு தீபாராதனை நடந்தது.
இதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் பால், தயிர் உள்ளிட்ட அபிேஷகப் பொருட்களை கொடுத்து தரிசனம் செய்தனர்.