/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அம்பலவாணன்பேட்டை பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
/
அம்பலவாணன்பேட்டை பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
அம்பலவாணன்பேட்டை பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
அம்பலவாணன்பேட்டை பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூலை 09, 2024 05:49 AM

கடலுார் : குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில், 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர்-பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில், ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கினார்.
அப்போது, தலைமை ஆசிரியை சத்யா, ஆசிரியைகள் உமாராணி, தனலட்சுமி உடனிருந்தனர்.