/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாடர்ன் பிரைமரி பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
/
மாடர்ன் பிரைமரி பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
மாடர்ன் பிரைமரி பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
மாடர்ன் பிரைமரி பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூலை 09, 2024 05:46 AM

கடலுார் : கடலுார் புதுப்பாளையம் மாடர்ன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர்-பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடலுார் புதுப்பாளையம் மாடர்ன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், பள்ளி தாளாளர் புகழேந்தி, மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கினார்.
தலைமை ஆசிரியை காயத்ரி, ஆசிரியைகள் ஜீவிதா, புனிதா உடனிருந்தனர்.