ADDED : ஆக 25, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே தனியார் நிறுவன ஊழியர், துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த எய்தனுாரை சேர்ந்தவர் வீரப்பன் மகன் கலைக்குமார், 22; ஐ.டி.ஐ., படித்துள்ள இவர், சிங்கிரிகுடியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி புதுச்சேரி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று அதிகாலை 6:00 மணியளவில், அங்குள்ள காலனி சுடுகாடு அருகே வேப்ப மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின்பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, கலைக்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

