/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விநாயகர் சதுர்த்தி விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
/
விநாயகர் சதுர்த்தி விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
விநாயகர் சதுர்த்தி விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
விநாயகர் சதுர்த்தி விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
ADDED : செப் 09, 2024 05:38 AM

மந்தாரக்குப்பம்: வடலுார் பஸ்நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி பல்வேறு போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
வடலுார் பஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கணபதி பிரதிஷ்டை செய்து சிறப்பு அபிேஷகம், மற்றும் தீபாராதனை நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவையொட்டி மாணவ, மாணவியர்களிடையே பரத நாட்டியம், சிலம்பாட்டம், இசைக்கச்சேரி நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி அறக்கட்டளை தாளாளர் ராஜமாரியப்பன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
விழாவில் இந்து முன்னணி அமைப்பு தலைவர் அருள்குமார், உட்பட பலர் பங்கேற்றனர்.