ADDED : பிப் 22, 2025 07:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலம் ரயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரயில்வே தனியார் மயமாவதை நிறுத்த வேண்டும். ஆட்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பயோமெட்ரிக் என்ற பெயரால் தொழிலாளர்களை துன்புறுத்தக் கூடாது, அனைத்து வகை பணியாளர்களுக்கும் 8 மணி நேர வேலையைஉறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளை தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் கணேஷ்குமார் உட்பட தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர். அதில், மத்திய அரசையும், ரயில்வே நிர்வாகத்தையும் கண்டித்து கோஷமிடப்பட்டது.

