sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குறைகேட்புக் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

/

குறைகேட்புக் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

குறைகேட்புக் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

குறைகேட்புக் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : மார் 11, 2025 05:51 AM

Google News

ADDED : மார் 11, 2025 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 9 மாற்றுத் திறனாளிகளுக்கு 6.54 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

கடலுார் கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை தொடர்பாக 1000 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு 6 லட்சத்து 54 ஆயிரத்து 145 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்டங்களை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், கலெக்டர் நேர்முக உதவியாளர் ரவி, டி.எஸ்.ஓ., ராஜி, கலால் உதவி ஆணையர் சந்திரகுமார், துணை ஆட்சியர் ரமா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பலத்த பாதுகாப்பு


குறைகேட்புக் கூட்டத்தையொட்டி, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வழக்கமாக மூன்று, நான்கு போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். நேற்று எப்போதும் இல்லாத அளவில் 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். குறைகேட்புக் கூட்டத்திற்கு செல்லும் பொதுமக்கள் அனைவரையும் விசாரணை செய்து, பலத்த சோதனைக்கு பின்னரே கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.

விசாரித்தபோது, விஷம் குடித்து இறந்தவரின் பெற்றோர், உறவினர்கள் என கருவேப்பிலம்பாடி கிராம மக்கள் திரண்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டது தெரிய வந்தது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் வேனில் வந்து கலெக்டரை சந்தித்து மனு அளித்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us