sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

துாய்மையான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை

/

துாய்மையான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை

துாய்மையான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை

துாய்மையான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை


ADDED : ஜூலை 22, 2024 01:19 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம் : கம்மாபுரம் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தொட்டிகளில் 'குளோரினேஷன் ' செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்மாபுரம் வட்டார ஊராட்சி பகுதிகளில் குடிநீரால் ஏற்படும் தொற்று பாதிப்பை தவிர்க்க மேல்நிலை தொட்டிகளில் குளோரினேஷன் செய்து கிராம பகுதிகளில் சுத்தமான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் மேல்நிலை தொட்டிகளில் பாசி படர்ந்து சிறுநுண்ணியர்கள் உற்பத்தியாகி வாந்தி, பேதி, காலரா போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தக் கூடும்.

இதனை தடுக்க ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து பாசிகளை அகற்றி குளோரின் கலந்து துாய்மையான குடிநீரை வினியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

எனவே கிராமங்களில் தொற்று பாதிப்பை தவிர்க்க கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்






      Dinamalar
      Follow us