/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடத்தில் சென்டர் மீடியன் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
/
பெண்ணாடத்தில் சென்டர் மீடியன் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பெண்ணாடத்தில் சென்டர் மீடியன் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பெண்ணாடத்தில் சென்டர் மீடியன் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஆக 18, 2024 11:37 PM
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் விபத்து மற்றும் போக்குவரத்து பாதிப்பை போக்க சென்டர் மீடியன் அமைக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் பெண்ணாடம் வழியாக பஸ், லாரி, சிமென்ட் லோடு லாரிகள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. இங்கு அரசு, தனியார் பள்ளிகள், பேரூராட்சி அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், வங்கிகள், அரசு, தனியார் மருத்துவ மனைகள் உள்ளதால் பழைய பஸ் நிலையம், கடைவீதி பகுதி எந்நேரமும் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும்.
இதில், சுமைதாங்கி பஸ் நிறுத்தம் முதல் முதல் புதிய பஸ் நிலையம் வரை உள்ள கடைகளுக்கு வந்து செல்வோர்கள் தங்களின் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திச் செல்கின்றனர்.
மேலும், தள்ளுவண்டி வியாபாரிகளும் வண்டிகளை சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்படுவதுடன் விபத்துகளும் அதிகரித்து வருகிறது.
விபத்துகளை தவிர்க்க சுமைதாங்கி முதல் புதிய பஸ் நிலையம் வரையிலான சாலையை விரிவாக்கம் செய்து சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என பொது மக்கள் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, விபத்து மற்றும் போக்குவரத்து பாதிப்பை போக்க சுமைதாங்கி பஸ் நிறுத்தம் முதல் புதிய பஸ் நிலையம் வரை பெண்ணாடம் நகரில் சென்டர் மீடியன் அமைக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

