sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனை பட்டா வழங்க கோரி பொதுமக்கள் போராட்டம்

/

மனை பட்டா வழங்க கோரி பொதுமக்கள் போராட்டம்

மனை பட்டா வழங்க கோரி பொதுமக்கள் போராட்டம்

மனை பட்டா வழங்க கோரி பொதுமக்கள் போராட்டம்


ADDED : ஜூன் 22, 2024 05:02 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : வீட்டுமனை பட்டா வழங்க கோரி, விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் எருமனுார் பகுதியில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

அப்போது பயனாளிகள் அனைவருக்கும், ஒப்படை மனு வழங்கப்பட்டு, பின்பு பட்டா வழங்கப்படும் என, வருவாய் துறையினர் கூறினர். இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள், வீட்டு மனைபட்டா வழங்க கோரி, விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் உதயகுமார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பின், தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், பொதுமக்கள் அனைவரும் தங்களின் கோரிக்கையை மனுவாக அளித்து சென்றனர்.

இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us