sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பூரண மதுவிலக்கு அமல்படுத்த பொது நல கூட்டமைப்பு கோரிக்கை

/

பூரண மதுவிலக்கு அமல்படுத்த பொது நல கூட்டமைப்பு கோரிக்கை

பூரண மதுவிலக்கு அமல்படுத்த பொது நல கூட்டமைப்பு கோரிக்கை

பூரண மதுவிலக்கு அமல்படுத்த பொது நல கூட்டமைப்பு கோரிக்கை


ADDED : ஜூன் 22, 2024 05:48 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டுமென, மாநகர பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு, கடலுார் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி அனுப்பியுள்ள மனு:

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஏராளமானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இதுபோன்ற சம்பவங்கள் மரக்காணம், செங்கல்பட்டு பகுதிகளில் நடந்துள்ளது.

தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தில் எங்கும் சாராயக் கடைகள் காணப்படுகிறது. குறைந்த விலைக்கு பாக்கெட் சாராயம் விற்பனையாகிறது. கள்ளத் தனமாக உற்பத்தி செய்யப்படும் சாராயத்தில் ரசாயன மாற்றம் ஏற்பட்டு விஷ சாராயமாகிறது என்ற அபாயம் தெரியாமல் குடித்து உயிர் இழப்பது தொடர்கதையாக உள்ளது.

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us