/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரங்கநாத பெருமாள் கோவிலில் தாயாருக்கு பூவங்கி சேவை
/
ரங்கநாத பெருமாள் கோவிலில் தாயாருக்கு பூவங்கி சேவை
ADDED : ஆக 03, 2024 04:25 AM

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று ஆடிமாதம் 3ம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு மூலவர் தாயார் பூவங்கி சேவையில் அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெருமாள் சமேத ரங்கநாயகி தாயார் கோவிலில் நேற்று 2 ம்தேதி ஆடிமாதம் 3ம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அன்று காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம்.
காலை8:00 மணிக்கு காலசந்தி பூஜை, 9:00 மணிக்கு மூலவர் ரங்கநாயகி தாயார், உற்சவர் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், பகல் 12:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு , மாலை 6:00 மணிக்கு மூலவர், உற்சவர் பெருமாள் பூவங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு உற்சவர் ரங்கநாயகி தாயார் உள்புறப்பாடும், இரவு 9:30 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.