/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
/
மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
ADDED : மே 04, 2024 07:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன்,48; விவசாயி. இவர், அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சற்று மனநலம் பாதித்த பெண்ணை வலுக்கட்டாயமாக துாக்கி சென்று பாலியல் பலாத்தாரம் செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.