/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆற்று மணல் கடத்தல்: விருதையில் 4 பேர் கைது
/
ஆற்று மணல் கடத்தல்: விருதையில் 4 பேர் கைது
ADDED : ஜூலை 02, 2024 05:42 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமையில், வனவர்கள் சிவக்குமார், பன்னீர்செல்வம், வனக்காப்பாளர் நவனீதகிருஷ்ணன், அமுதபிரியன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் இரவு சத்தியவாடி காப்புகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள வெள்ளாற்றில் சிலர் மா்டடுவண்டிகளில் ஆற்றுமணல் கடத்தியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் ஓலையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி, தாவிடநல்லுாரை சேர்ந்த வேல்முருகன், சின்னையன், வண்ணான்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சின்னராசு என்பது தெரியவந்தது.
விருத்தாசலம் வனத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிந்து, நால்வரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.