sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுடுகாட்டிற்கு சாலை வசதி அ.தி.மு.க., பிரமுகர் கோரிக்கை

/

சுடுகாட்டிற்கு சாலை வசதி அ.தி.மு.க., பிரமுகர் கோரிக்கை

சுடுகாட்டிற்கு சாலை வசதி அ.தி.மு.க., பிரமுகர் கோரிக்கை

சுடுகாட்டிற்கு சாலை வசதி அ.தி.மு.க., பிரமுகர் கோரிக்கை


ADDED : ஜூன் 22, 2024 05:06 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : புதுச்சத்திரம் வில்லியநல்லுார் நாடார் தெரு சுடுகாட்டிற்கு சாலை வசதி செய்துத்தர கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அ.தி.மு.க., பிரமுகர் வில்லியநல்லுார் சுதாகர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு;

புதுச்சத்திரம் வில்லியநல்லுார் நாடார் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த சமுதாய மக்களுக்கு சொந்தமான சுடுகாடு உள்ளது. அங்கு, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், அரசு சார்பில், தகனமேடையுடன் சுற்றுச்சுவர், கை பம்பு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி இல்லாததால், இறப்பு ஏற்படும்போது அப்பகுதியினர் இறந்தவர் சடலத்தை கொண்டு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். சுடுகாட்டிற்கு சாலை வசதி கேட்டு தொடர்ந்து, போராடி வருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன், முதியவர் ஒருவர் உடல் நலகுறைவால் இறந்ததால் உடலை அடக்கம் செய்ய மிகவும் சிரமப்பட்டு துாக்கி சென்று அடக்கம் செய்தனர்.

எனவே, வில்லியநல்லுார் நாடார் தெரு சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி அமைத்தர வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us