sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலையோரம் திடீர் தீ விபத்து; விருத்தாசலம் அருகே பரபரப்பு

/

சாலையோரம் திடீர் தீ விபத்து; விருத்தாசலம் அருகே பரபரப்பு

சாலையோரம் திடீர் தீ விபத்து; விருத்தாசலம் அருகே பரபரப்பு

சாலையோரம் திடீர் தீ விபத்து; விருத்தாசலம் அருகே பரபரப்பு


ADDED : ஜூன் 19, 2024 01:12 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : கோ.பூவனுாரில் சாலையோரம் கொட்டபட்டிருந்த எள் செடி கழிவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒருமாதமாக எள் அறுவடை பணி நடந்தது. இந்நிலையில், விருத்தாசலம் அடுத்த கோ.பூவனுார் பகுதியில் அறுவடை செய்த எள் செடிகளை விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் உலர்த்தி எள் மணிகளை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக கோ.பூவனுார் பகுதியில் சாலையோரம் எள் செடி கழிவுகள் மலைபோல் குவிந்து கிடந்தது.

நேற்று அதிகாலை அந்த எள் செடி கழிவுகளை மர்மநபர்கள் சிலர் தீயிட்டு கொளுத்தினர். இதனால், தீ மளமளவென பரவியது. இதன்காரணமாக, சாலையில் வகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us