sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ.2.19 கோடி மோசடி வழக்கு; தலைமறைவு வாலிபர் கைது

/

ரூ.2.19 கோடி மோசடி வழக்கு; தலைமறைவு வாலிபர் கைது

ரூ.2.19 கோடி மோசடி வழக்கு; தலைமறைவு வாலிபர் கைது

ரூ.2.19 கோடி மோசடி வழக்கு; தலைமறைவு வாலிபர் கைது


ADDED : ஆக 06, 2024 07:22 AM

Google News

ADDED : ஆக 06, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : மளிகை பொருட்கள் கொள்முதலில் முதலீடு செய்து தருவதாக கூறி ரூ.2.19 கோடி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையை சேர்ந்தவர் அப்துல் அஜிது, 60; இவருக்கு தனது உறவினர் மூலமாக கும்பகோணம், சோழபுரத்தை சேர்ந்த முகமது சுஹைல் என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

அவர், மளிகை பொருட்கள் கொள்முதல் செய்து மொத்த வியாபாரம் செய்வதாகவும், இதில், முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும், லாபத்தில் 40 சதவீதம் கமிஷன் தருவதாக கூறினார்.

இதனை நம்பி அஜிது கடந்த பிப்., 14ம் தேதி முதல், ஏப்., 30ம் தேதி வரை 2 கோடியே 83 லட்சத்து 51 ஆயிரத்து ரூபாயை முகமது சுஹைலின் வங்கி கணக்கில் செலுத்தினார்.

பணத்தை பெற்றுக் கொண்ட முகமது சுஹைல் லாபத் தொகை ரூ.63 ஆயிரம் மட்டும் வழங்கினார். அதிர்ச்சி அடைந்த அப்துல் அஜிது பணத்தை கேட்டதும், கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து முகமது சுைஹலை ஒரு மாதத்திற்கு முன் கைது செய்தனர். தலைமறைவாக இரந்த அவரது தம்பி முகமது முஷரப்பை,23; போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us