ADDED : ஜூலை 14, 2024 04:19 AM

அ நிறம் | அளவு
சிதம்பரம், : சிதம்பரத்தில் மெய்கண்ட சித்தாந்த வித்யாசாலை டிரஸ்ட் மற்றும் மதுரை தியாகராஜா கல்லுாரி சார்பில் சைவ சித்தாந்த பயிற்சி நிறைவு விழா நடந்தது.
கடந்த 1ம் தேதி துவங்கி 10 ம் தேதி வரை நடந்த சைவ சித்தாந்தப் பயிற்சி நிறைவு விழா நடந்தது. ஆடிட்டர் ராமநாதன் வரவேற்றார், பேராசிரியர் அருணகிரி முன்னிலை வகித்தார். திருவாடுதுறை ஆதினம் கந்தசாமி சிறப்புரையாற்றினார்.
அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் வாழ்த்துரை வழங்கினார்.
சைவசித்தாந்த பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
