ADDED : ஏப் 26, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: கொள்ளிடம் கீழனை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். விவசாய சங்கத்தினர், முத்துகுமாரசாமி, குணசேகரன், பாஸ்கரன், ராமமூர்த்தி , மனோகரன் முன்னிலை வகித்தனர்.
ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின், கண்காணிப்பாளர் திருமுருகன் வளாகத்தில், வேம்பு மற்றும் புங்கை மரகன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் விவசாயிகள் திருநாவுக்கரசு, ராசா, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

